Tuesday, November 28, 2023

மகனோ மகளோ தோளில் சுமந்து நடக்கையில் - ஒரு ஆண் சிறகுகள் முளைத்த தேவதை ஆகிறான்!
ஆயிரம் நாட்கள் தே‌தி கிழித்த போதும் நாட்காட்டி உணர்த்தாததை மீசையின் அந்த ஒற்றை வெள்ளை முடி உணர்த்தக்கூடும்!
இந்த இரவின் ஒற்றை மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் கண்டதாக சொன்னான் வானவில்லை! கொஞ்சம் மழை நனைத்த வானில் தெரியும் ஏழு வ‌ண்ண‌ம்தான் வானவில் என்றிருந்தேன் நேற்று வரை!!!
எத்தனை காலம் எத்தனை யுகம் இன்னமும் அப்படியே தான் பொழிந்து கொண்டிருக்கும் எனில் அதை மழை என்று மட்டும் எப்படி சொல்ல முடியும் அன்பாகத்தானே இருக்கு முடியும்!

Monday, April 25, 2016

எல்லோருக்கும் பொதுவானதாக இருப்பினும் ஒரு பறவையின் வானம் என்பது அதன் சிறகின் வலிமையை பொறுத்தே அமைகிறது!

Sunday, December 22, 2013

உன் நேசத்தை காட்டிலும் சிறந்த வரத்தை உன்னாலும் கொடுக்க இயலாது...

Monday, August 1, 2011


உன் மௌனங்கள் தொலைத்த இடைவெளியில்
கண்டெடுத்திருக்கலாம் என்னை எப்பொழுதேனும்
நீ நீயாக இருக்கும் எல்லா காரணங்களுக்காகவும்
நான் தொலைக்கப்பட்டிருக்கிறேன்
என் அடையாளங்களை!
வெறுமை நிறைந்த அறையில் இரவின் ரணம்
இறுக்கி செல்கிறது நீயற்ற என்னை! எனினும்
பிறிதொரு நாளில் நிகழலாம் அந்த சந்திப்பென
மிச்சம் வைத்திருக்கிறேன் சில வார்த்தைகளையும்
கொஞ்சம் கண்ணீரையும்!