மகனோ மகளோ தோளில்
சுமந்து நடக்கையில் - ஒரு ஆண் சிறகுகள் முளைத்த
தேவதை ஆகிறான்!
ஆயிரம் நாட்கள் தேதி கிழித்த போதும்
நாட்காட்டி உணர்த்தாததை
மீசையின் அந்த ஒற்றை வெள்ளை முடி உணர்த்தக்கூடும்!
இந்த இரவின் ஒற்றை மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் கண்டதாக சொன்னான் வானவில்லை!
கொஞ்சம் மழை நனைத்த வானில் தெரியும் ஏழு வண்ணம்தான் வானவில் என்றிருந்தேன் நேற்று வரை!!!
எத்தனை காலம் எத்தனை யுகம்
இன்னமும் அப்படியே தான்
பொழிந்து கொண்டிருக்கும் எனில்
அதை மழை என்று மட்டும் எப்படி சொல்ல முடியும்
அன்பாகத்தானே இருக்கு முடியும்!